Tuesday 7th of May 2024 07:44:26 AM GMT

LANGUAGE - TAMIL
-
மேற்கு வங்கத் தோ்தல் வாக்குப்பதிவின்போது  இடம்பெற்ற வன்முறையில் ஐவர் சுட்டுக் கொலை!

மேற்கு வங்கத் தோ்தல் வாக்குப்பதிவின்போது இடம்பெற்ற வன்முறையில் ஐவர் சுட்டுக் கொலை!


இந்தியா - மேற்கு வங்க மாநிலத்தில் இன்று இடம்பெற்ற சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது பாரதீய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதை அடுத்து மத்திய ஆயுத காவல் படையினர் (CRPF) நடத்திய துப்பாக்கிச் கூட்டில் 4பேர் கொல்லப்பட்டனர். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர்.

மேற்கு வங்கம் கூச்பெஹார் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றின் அருகேஇடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து சிதால் குர்ச்சி தொகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அங்கு முதல்கட்டத் தோ்தல் கடந்த மாதம் 27-ஆம் திகதியும், இரண்டாம் கட்டத் தோ்தல் கடந்த 1-ஆம் திகதியும், 3-ஆம் கட்டத் தோ்தல் கடந்த 6-ஆம் திகதியும் நடைபெற்றன.

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் சிதல்குச்சி பகுதியில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோது பாரதீஜ ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறியது. இதனையடுத்து மத்திய ஆயுத காவல் படையினர் வாக்குச் சாவடி அருகே வன்முறையில் ஈடுபட்டவர்களை நோக்கி நோக்கி சரமாரியாக சுட்டனர். இதன்போது 4 பேர் கொல்லப்பட்டதுடன், நால்வர் காயமடைந்தனர்.

மற்றும் ஒரு தொகுதியில் ஒருவா் கொல்லப்பட்ட நிலையிர் தோ்தல் வன்முறைகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5 ஆக பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகத் இந்திய மத்திய தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE